வாழ்க வளமுடன்

Sunday, 21 September 2014

வெளிச்சம்...வெளிச்சம்... கேரளத்தில் வெளிச்சம்

வெளிச்சம்...வெளிச்சம்... கேரளத்தில் வெளிச்சம்.
மைக்கல் பாரடே 1831 அக்டோபர் 27 ம் தேதி இரவு நடத்திய சோதனையின் பிறந்த வெளிச்சமே மின்சாரம். நம் வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது மின்சாரம்.
கேரள மாநிலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்களைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.
K. S. E. B. ன்  மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்படும் நீர்மின் திட்டங்கள்
வரிசை  எண்
திட்டத்தின் பெயர்
உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு மெகாவாட்டில்
1
பள்ளிவாசல்
37.5
2.
செங்குளம்
48
3.
பெரிங்கல்குத்து
32
4
நேரியமங்கலம்
54
5
பன்னியர்
30
6
சபரிகிரி
325
7
சோலயார்
54
8
குற்றியாடி
75
9
இடுக்கி
780
10
இடமலயார்
75
11
கல்லட
15
12
பேப்பார
3
13
லோவர்பெரியார்
180
14
மாட்டுப்பெட்டி
2
15
பொரிங்கல் இடதுகர
16
16
கக்காடு
50
17
குற்றியாடி
50
18
மலம்புழா
2.5
19
செப்புகடவ் 1
2.7
20
செப்புகடவ் 2
3.75
21
உருமி 1
3.75
22
உருமி 2
2.4
23
மலங்கர
10.5
24
லோவர் மீன்முட்டி
3.5
25
நேரியமங்கலம் எக்ஸ்டன்சன்
25
26
குற்றியாடி டெயில் ரேஸ்
3.75
27
வழிக்கடவு வருடத்திற்கு
24 தசலட்சம் யூனிட்
28
பன்னியர் ஒக்கமென்டேசன் வருடத்திற்கு
10 தசலட்சம் யூனிட்
29
நாரககானம் வருடத்திற்கு
7 தசலட்சம் யூனிட்
30
பொரிங்கல்
60 தசலட்சம் யூனிட்
31
அழுதை
57 தசலட்சம் யூனிட்
32
வடக்கேபுழை
12 தசலட்சம் யூனிட்
33
குற்றியாடி ஒக்கமென்டேசன்
12 தசலட்சம் யூனிட்

தனியார் நீர்மின் திட்டங்கள்
வரிசை எண்
திட்டத்தின் பெயர்
உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு மெகாவாட்டில்
1
மணியார்
12
2
குத்துங்கல்
21

அணல் மின் திட்டம்
வரிசை எண்
திட்டத்தின் பெயர்
உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு மெகாவாட்டில்
1
காயங்குளம்- மத்திய பொதுத்துறை ,திட்டம்
359.58
2
பிரம்மபுரம்
106.6
3
KDPP  கோழிக்கோடு
128




காற்றாலை மின் திட்டம்
வரிசை எண்
திட்டத்தின் பெயர்
உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு மெகாவாட்டில்
1
கஞ்சிக்கோடு
2.03
2
ராமக்கல்மேடு தனியார்
10.5
3
அகளி தனியார்
6

கடல் அலை மின்திட்டம்
6000 கி.மீட்டர் நீண்ட கடற்கரை இந்தியாவிற்கு உள்ளது. சக்தியாக வீசும் கடல் அலைகளிலிருந்து 40000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக 1982 முதல் சென்னை ஐ. ஐ. டி. யில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பலனாக திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அரபிக்கடலில் உலகிலேயே முதல் கடல் அலை மின்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1993 ஏப்ரல் 19 ம் தேதி முதல் கடல் நிலையத்திலிருந்து தரைக்கு மின்சாரம் பாய்ந்து வரத் தொடங்கியது.
நீர்வீழ்ச்சி மின்திட்டம்
குன்றுகளின் மேலிருந்து செங்குத்தாக பாய்ந்து வரும் தண்ணீரின் சக்தி ஆல்டிநேட்டரை சுழல வைத்து மின்சாரம் உற்பத்தியாகிறது. கேரளாவில் ராஜமலையிலும், மாமலக்கண்டத்திலும், மாங்குளத்தும் இந்த சிறிய நீர்மின் திட்டத்திலிருந்து 2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment